வெற்றி அல்லது வீரமரணம்
Monday, 8 September 2025
தீண்டாமை சுவர்...
Tuesday, 26 August 2025
(27.08.2025 தீக்கதிர்)
வீரவணக்கம் தமிழ் திரைப்படம் - ஜி. ராமகிருஷ்ணன்
தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங் களிலும் இந்த மாதம் 29 அன்று திரையரங்குகளுக்கு வர இருக்கிறது, ‘வீரவணக்கம்’. அண்மையில் நடைபெற்ற முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், தி.க தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோருடன் சேர்ந்து இந்தப் படத்தைக் காணும் வாய்ப்பு அமைந்தது. தமிழ்நாடு, கேரள மக்களின் சகோதரத்து வத்தை உறுதிப்படுத்தும் ஓர் அற்புதமான படம் இது. இரண்டு மாநிலங்களுக்குமான வரலாறு சார்ந்த தொப்புள்க்கொடி உறவை மையப்படுத்து கிறது. இ.எம்.எஸ் “எனது தலைவர் கிருஷ்ண பிள்ளை” என்று தனது சுயசரிதையில் எழுதி யிருக்கிறார். வைக்கத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த கம்யூனிஸ்ட் போராளி கிருஷ்ணப்பிள்ளை சிறியதொரு கிராமத்திற்குச் சென்றாலும் இரண்டே நாட்களில் அங்குள்ள மக்களை அரசியல்படுத்தி கம்யூனிஸ்ட்டுகளாக மாற்றிடும் திறன் பெற்றி ருந்தவர். கட்சி தடைசெய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் இடலாக்குடி சிறையில் அடைக்கப்பட்டார். கம்யூனி ஸ்ட்டுகள் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அந்தச் சிறையில் அடைத்து வைத்து, அன்றைய பிரிட்டிஷ் அரசு சித்ரவதை செய்தது. அந்தச் சிறையில் 1940-களில் கிருஷ்ணப்பிள்ளை, மதுரை யைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் இருவரும் அடைக்கப்பட்டனர். அங்கே அவர்கள் உயிர்த் தோழர்கள் ஆனார்கள். அந்த நட்பால் வேலாயுதமும் கம்யூனிஸ்ட் ஆனார். படத்தில் கிருஷ்ணப்பிள்ளையாக சமுத்திரக் கனி நடித்திருக்கிறார். வேலாயுதத்தின் பேரனாக பரத்தும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர் 95ஆவது அகவையில் இருக்கும் கேரளத்தின் புரட்சிப் பாடகி பி.கே.மேதினி. சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் தமிழகத்தி லும் கேரளாவிலும் சாதிக் கொடுமை பல கொடூர மான வடிவங்களில் இருந்தது. குறிப்பாக, கேர ளத்தின் சாதிக் கொடுமையைப் பற்றிக் குறிப்பிட்ட சுவாமி விவேகானந்தர், “பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் கீழத்தஞ்சை உள்ளிட்டு எல்லா மாவட்டங்களிலும் சாதிக் கொடுமை நிலவியது. சாதிக் கொடுமையும், நிலப்பிரபுத்துவச் சுரண்டலும் பின்னிப் பிணைந்திருந்த நிலையில், கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தினார்கள். புன்னப்புரா, வய லார் உள்ளிட்ட போராட்டங்களைத் தொடங்கியவர் கிருஷ்ணப்பிள்ளை. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த அந்தப் போராட்டங்கள் படத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நிலப்பிரபுத்துவச் சுரண்டலையும், கொடூர மான சாதியக் கொடுமையையும் ஒருசேர எதிர்த்து நடந்த போராட்டம் அம்மாநிலத்தில் தீண்டாமை பெருமளவுக்கு ஒழிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. மேலும், 1957இல் ஆட்சிப் பொறுப் பேற்ற இ.எம்.எஸ். தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு மேற்கொண்ட நில விநியோக நட வடிக்கைகள் தேசத்திற்கே வழிகாட்டும் அளவுக்கு பெரிய மாற்றங்களை நிகழ்த்தின. உயர்சாதியைச் சேர்ந்தவரும் செல்வந்தரு மான ராஜ மகேந்திரன் தமிழகத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் கடுமையான சாதி மற்றும் கொடுமை களை அனுபவித்து வரும் பட்டியல் சமூக மக்க ளின் மீட்பராக மாறுகிறார். தனது தாத்தாவிற்கும், அவரோடு இடலாக்குடி சிறையில் அடைக்கப் பட்டிருந்த கிருஷ்ணப்பிள்ளைக்கும் நட்பு ஏற்பட்ட தை அந்த மக்களிடம் கூறுகிறார். கிருஷ்ணப் பிள்ளையின் வரலாற்றை எடுத்துக்கூறி சாதிக் கொடுமைகளை எதிர்த்துத் தைரியத்துடன் போராட ஊக்குவிக்கிறார். அந்தக் காலத்தில் கிருஷ்ணப்பிள்ளையுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற சிறுதா என்ற புரட்சிப் பாடகியை சந்திப்பதற்காக மகேந்திரன் கிராமவாசிகளுடன் கேரளத்திற்குச் செல்கிறார். அந்த சிறுதாவுக்கு இப்போது 97 வயதாகிறது. தன்னைச் சந்திக்க வந்த கிராம மக்களுக்கு சிறுதா சொல்லும் போராட்டக் கதைகள் அவர்களுக்குத் துணிவையும் நம்பிக்கையையும் ஊட்டுகின்றன. தோழர் பி. கிருஷ்ணப்பிள்ளை மறைந்துவிட்டாலும் இந்த மக்களுக்கு ஒரு புதிய ஊக்க சக்தியாகத் திகழ்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் கேரள மாநிலக் குழு செயலாளராக இருந்தவர் கிருஷ்ணப்பிள்ளை. அடக்குமுறைச் சூழலில் மாறுவேடத்தில் ரகசியமாக இரு மாநிலங் களிலுமே அவர் பணியாற்றினார். அடக்கு முறை களை எதிர்கொண்ட அவரது துணிச்சல், சாகசம், தலைமைத்துவ திறன்கள் படத்தில் உயிர்ப்போடு சித்தரிக்கப்பட்டுள்ளன. இடலாக்குடி சிறையில் இருந்தபோது, சுசீந்திரம் கிராமத்தின் தங்கம்மா வுடன் ஏற்பட்ட நட்பு, காதலாக, திருமண உறவாகப் பரிணமிப்பதைக் காட்டியிருப்பது படத்திற்கு மேலும் மேலுமோர் உயிர்ப்பைத் தந்துள்ளது. கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வித்திட்ட கிருஷ்ணப்பிள்ளை தமிழகத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ் மகேந்திரன் மகள் லட்சுமி பட்டிய லினத்தைச் சார்ந்த இளைஞரை விரும்புகிறார். இந்தச் சாதி மறுப்புக் காதலை சாதி உணர்வா ளர்கள் ஏற்கவில்லை. தமிழகத்தில் இன்றும் தொடர்கதையாக உள்ள சாதி ஆணவக் கொலை யை இப்படம் சாடுகிறது. இரண்டு மாநிலங்களிலும் நிலவிய சாதிக் கொடுமையை எடுத்துக் காட்டும் ‘வீர வணக்கம்’, தந்தை பெரியார் முன்னெடுத்த சமூக சீர்திருத்த இயக்கத்தைக் கொண்டாடுகிறது. படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்த சமுத்திரக்கனி, பரத், மேதினி பங்களிப்பு சிறப்பா னது. பிற பாத்திரங்களில் ரித்தேஷ், சுரபி லட்சுமி, பிரேம்குமார், பரணி, ஐஸ்வீகா, ஆதர்ஷ், சித்தாங் கனா, சித்திக், அரிஷ்டோ சுரேஷ், ரமேஷ் பிசாரடி, பீமன் ரகு, பிரமோத் வெளியநாடு, உல்லாஸ் பந்தளம், ரியாஸ் நெடுமங்காடு ஆகியோரும் சீரான உணர்வார்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தமது தனித்துவக் குரலோடு கூடிய பாடல்களால் குடியேறியவரான டி.எம். சௌந்தரராஜனின் புதல்வர் டி.எம்.எஸ். செல்வகுமார் பின்னணிப் பாடகராக அறிமுக மாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீர வரலாற்றை யாராலும் மறுக்க முடியாத, மறக்க முடியாத வடிவில் திரைப்படமாக பதிவுசெய்வது எப்போதாவதுதான் நிகழ்கிறது. அந்த வகையில் இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் மிக நேர்த்தியான கலை வடிவில் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் ஓர் அத்தியா யத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழிலும் மலையா ளத்திலும் மட்டுமல்லாமல், எல்லா மொழிகளிலும் மக்களிடம் போய்ச் சேர வேண்டிய படைப்பு இது. மனிதரை மனிதர் சுரண்டும் முறையை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கமும், கம்யூனிஸ்ட்டுகளும் இந்த நாட்டின் மக்களுக்காக எத்தகைய வீரப் போராட்டங்களை மேற்கொண்டார்கள், அருந் தியாகங்களை மேற் கொண்டார்கள் என்பனவற்றை அறிந்துகொள் ளும் ஆர்வத்தை அனைவருக்கும் ஏற்படுத்தும் படம் என்றால் மிகையில்லை. கடந்த காலத்தை உரமாக்கி எதிர்காலத்தை நமதாக்கிட நிகழ்கா லத்தின் இளம் தலைமுறையினருக்கு ஒரு கையேடாக வந்துள்ளது ‘வீர வணக்கம்’.
ஜி. ராமகிருஷ்ணன்
வீடுகளை இழந்து வீதியில் நிற்கும் நரிக்குறவ மக்கள்
Thursday, 31 July 2025
தீக்கதிர் 01.08.2025
Tuesday, 20 May 2025
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் எதிர்காலச் சவால்களும் - எஸ்.கவிவர்மன்
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் எதிர்காலச் சவால்களும் - எஸ்.கவிவர்மன்
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (Artificial Intelligence) சம்பந்தமான உலகளாவிய முதல் கூட்டம் 2024 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ட ரெஸ் ‘மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அமைதி மற்றும் பாது காப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும்” என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். செயற்கை நுண்ணறிவு என்பது மிக வேகமாக வளர்ந்து வரும், எந்திரங்களை சிந்திக்க வைக்கும் தொழில்நுட்பமாகும். மனிதனைப் போலவே எந்திரங்களும் சிந்தித்து செயல்படும் திறனை கொண்டதாக உருவாக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து துறைகளை யும் ஆக்கிரமித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மனித மூளையை விட மிக வேகமாகவும் துல்லிய மாகவும் செயல்படுகிறது. பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டில் உதவுகிறது. மருத்துவம், அண்டவெளி ஆய்வுகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகுதித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மேம்பட்ட தகவல்களைத் தருவது போன்ற ஏராளமான நன்மைகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. விண்வெளி ஆய்வில் மிகத் துல்லியமாகச் செயல்படுவதால் மிகப் பெரிய முன்னேற்றத்தை எட்ட முடிந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சமூக ஊடகம், மின் வணிகம், இணையதளத் தேடல்கள் என தனி பயனாக்கப்பட்ட சேவைகளை ஒவ்வொரு தனிப் பயனருக்கும் வழங்குகிறது.
சவாலாக மாறும் அபாயம்!
மனிதர்களால் செய்ய முடியாத ஆபத்தான பணிகளை பேரிடர் காலங்களில் செய்ய உதவுகிறது. சுற்றுச்சூழல் போன்ற சமூக நலன் சார்ந்த பணிகளில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்களான காடுகள், மலைமுகடுகள், கடல் அடிப்பரப்பு போன்றவற்றில் இத்தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவிற்கு ஆய்வுகளை மேற்கொள்ள உதவுகிறது. இவற்றையெல்லாம் தாண்டியும் பல நன்மைகள் இருந்த போதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மிகப் பெரிய சவாலாக மாறும் அபாயம் உள்ளது. அனைத்து துறைகளிலும் வேலை இழப்பு தவிர்க்க முடியாதது ஆகிவிடும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தவறாகப் பயன் படுத்தப்பட்டால் நாட்டின் பாதுகாப்பிற்கே அது அச்சுறுத்தலாக அமையும். இத்தொழில் நுட்பம் இணையம் முழுவதும் விரவிக் கிடக்கும் தனிமனிதத் தரவுகள் உள்ளிட்ட பெரிய அள விலான தரவுகளை சேமித்துச் செயல்படுத்து கிறது. இது அனைத்து தரவு பாதுகாப்புப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகள் தயாரிக்கும் தன் இயக்க ஆயுதங்கள் மனித இனத்திற்கே அழிவை விளைவிக்கலாம். செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் பெரிய நிறுவனங்கள் ஓர் அதிகார மையமாக மாறும் அபாயமும் உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மிக சக்தி வாய்ந்தது. இது நன்மை மற்றும் தீமைகளை கொண்டுள்ளது. அதன் முழுமை யான பயன்பாடு வறைமுறைகளுக்கு உட்பட்ட தாக இருக்க வேண்டும். தனிப் பயனர்கள் பயன் படுத்துவதற்கு ஏற்றதாக ஒரு திறந்தவெளியாக ஏஐ தொழில்நுட்பம் இருப்பது மனித குலத்திற்கு நல்லதல்ல. எல்லா பணிகளையும் செயற்கை
நுண்ணறிவு ஆக்கிரமித்துக் கொண்டால் அது மனித குலத்தின் உழைக்கும் திறனையும் அறி வையும் மட்டுப்படுத்தி விடும். செயற்கையாக போட்டோகிராப் உருவாக்குவது, வீடியோ உருவாக்குவது என்பதெல்லாம் மிக எளிது.
மூன்று நிமிட குரலில்...
நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் வழக்காடிக் கொண்டிருந்தால் அவர் குரலை எழுத்து வடிவமாக ஏஐ மாற்றிக் கொண்டே இருக்கும் நடைமுறை நீதிமன்றத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஒருவர் பேசாததை பேசியது போல் கொண்டு வர முடியும். ஒருவர் குரலை மூன்று நிமிடம் ரெக்கார்ட் செய்தால் போதும். அதை வைத்து தத்ரூபமாக அவர் பல மணி நேரம் பல பாவனைகளில் பேசியது போலவே பேச வைக்க முடியும். கல்வித்துறையில் ரோபோக்கள், மருத்துவமனையில் ரோபோக்கள், ஆலைகள் தொழிற்சாலைகளில் ரோபோக்கள். அதற்கு ஓய்வு தேவையில்லை. விடுப்பு தேவையில்லை. மனிதர்களை விட பல மடங்கு செயற்கை நுண்ண றிவு திறனுடன் ரோபோக்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டன.
அனைத்துத் துறைகளையும் ஆட்கொள்ளும் ஏஐ...
வைரமுத்து, மேத்தா, அப்துல்ரஹ்மான், வாலி போன்ற இன்னும் பிற தமிழ் கவிஞர்களுக்கும் சுஜாதா, ஜெயகாந்தன், வசந்தி, அம்பை போன்ற எழுத்தாளர்களுக்கும் இனி வேலை இல்லாமல் போகலாம். ஒரு தலைப்பைக் கொடுத்து ஒரு சிறுகதை வேண்டும், ஒரு தலைப்பை கொடுத்து ஒரு கவிதை வேண்டும் என்றால் கண் இமைக்கும் நேரத்தில் தந்து விடு கிறது. இனி இளையராஜாவோ, ஏ.ஆர்.ரகுமான், தேவாவோ தேவையில்லை. பாடல் வரிகளை பதிவிட்டு இதற்கு ஒரு மெட்டமைத்து இசை யமைத்து தரவேண்டும் என்று கட்டளையிட்டால் உடனே புதிய மெட்டுடன் பாடல் தயாராகி விடுகிறது. அப்படியான ஏஐ தொழில்நுட்ப செய லிகள் தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒரு லச்சினை உருவாக்க வேண்டும் என்றால் ஒரு ஓவியர் தேவை. ஆனால் இப்போது அவர் களுக்கு வேலை இல்லை. என்ன மாதிரியான இலச்சினை வேண்டும் என நாம் குரல் பதிவிட்டால் ஒரு நிமிடத்தில் நாம் எதிர்பார்த்ததை விட அழகான லச்சினை வந்துவிடும். எதிர்கா லத்தில் உலகை ஆளப்போவது எந்திரங்களாகத் தான் இருக்குமோ என்ற அளவிற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் தாக்கம் அனைத்துத் துறைகளையும் ஆட்கொண்டு வருகிறது.
ஆழ்துளைக் கிணறு ஆபத்தும் மனிதக் கழிவகற்றும் கொடுமையும்