Saturday 24 June 2023

பெண்கள் மீதான பாசிசத்தின் வரம்பற்ற வன்முறைகள் - எஸ்.கவிவர்மன்

பெண்கள் மீதான பாசிசத்தின் வரம்பற்ற வன்முறைகள் - 

இந்திய பன்மைத்தன்மை கேள்விக் குள்ளாகியுள்ள காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான ஒடுக்குமுறைகள், பாலினப் பாகுபாடு கள், கேட்பாரற்ற வன்முறைகள், வன் புணர்வுகள் எல்லை மீறி நடந்து கொண்டி ருக்கின்றன. இந்தியச் சூழல், எதிர்காலத் தின் மீதான அவநம்பிக்கைகளை விதைத்துக் கொண்டிருக்கிறது. பாதுகாக்க வேண்டிய சட்டங்களும் அதிகார அமைப்பு களும், மனுநீதி கோட்பாடுகளுக்குப் பின்னால் பதுங்கிக்கிடக்கின்றன. மக்க ளைப் பாதுகாக்கும் ஜனநாயக அங்கமான நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றங் கள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் இறை யாண்மையை கொஞ்சம் கொஞ்மாக கைவிடுகிறதோ என்ற அச்சம் சமீபமாக அதிகரித்து வருகிறது. ஜனநாயகப் போராட்டங்களும், முழக் கங்களும் மதிப்பற்று ஒதுக்கப்படுகிறது. பெண்களின் நிலை இந்தியாவில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் சகிக்கமுடியாத அளவில் எல்லை மீறிய தாக இருக்கிறது. இந்து அடிப்படைவாத அமைப்புகள் பெண் சமூக செயல்பாட்டா ளர்களையும், அரசியல் தலைவர்களை யும், முற்போக்காளர்களையும் பாலின அடிப்படையில் பகிங்கரமாக கொச்சைப் படுத்தும் செயலை பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் கொஞ்சம் கூட தயக்கமின்றி செய்து வருகின்றனர்.

முகநூலில் செய்யப்படும் இழிவுகள், அவதூறுகள்
ஒரு முற்போக்காளர் சனாதனத்திற்கு எதிராக முகநூலில் ஒரு கருத்தை பதி விட்டார். அதற்கு அடுத்த நாள் அவரின்  நான்கு வயது பெண் குழந்தையின் படத்தை போலி முகநூல் பக்கத்தில் பதி விட்டு, இவளோடு உல்லாசமாக இருக்க என்று, அக்குழந்தையின் அப்பாவுடைய கைபேசி எண்ணில் அழைக்குமாறு சகிக்க முடியாத வக்கிரத்தை வெளிப்படுத்து கின்றனர். இந்த முகநூல் பக்கத்தின் நிலைப்படத்தில் ஆஞ்சநேயர் படம் வைக் கப்பட்டிருந்தது. சனாதன சக்திகளுக்கு எதிராக வலு வாக குரல் எழுப்பும் தமிழகம் அறிந்த பெண்  பேச்சாளர். அவருடைய படத்தைப்போட்டு ‘இவரோடு உறவு வைக்கவேண்டுமா, எனக்கூறி அவரின் கைபேசி எண்ணைப் பதிவிடுகின்றனர். இந்த முகநூல் பக்கத் தின் நிலைப்படம் காவி முண்டாசு, காவிக் கொடியுடன் முதுகுப்புறத்தை காட்டும் ஒரு இளைஞனின் படம் உள்ளது. பொதுவெளியில் துணிச்சலாக இயங் கும் பெண்களை பொதுத்தளத்தில் செயல் படவிடாமல் தடுக்க இழிவுகளையும் அவ தூறுகளையும் தொடர்ந்து செய்துவரும் சங் பரிவாரக் கூட்டங்களின் செயலை இந்து மதத்தின் புனிதத்தை காப்பாற்றுவதாகக் கூறும் எந்த தலைமையும் கண்டிப்ப தில்லை. மாறாக அதை ஆதரித்து வளர்த் தும்விடும் சீரழிவு சக்திகளாக மதஅடிப் படைவாத அமைப்புகளின் செயல்பாடு கள் உள்ளன

பாஜகவின் பெண்களுக்கும்...
சனாதனக் கோட்பாட்டின்படி பெண் என்பவள் அடங்கிக் கிடக்கவேண்டியவள் என்ற கற்பிதத்தை வலுவாக கட்டமைக்க முயல்கின்றனர். ‘கலாச்சாரக் காவலர் கள்’ என்ற போர்வையில் காதல் ஜோடிக ளை தாக்குவது, சாதி, மத மறுப்பு திரு மணங்கள் செய்பவர்களை கொலைகள் செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுப வர்கள் பெண்களாகவே உள்ளனர். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் உள்ள பெண்களுக்கும் இதுதான் நிலை. இதற்கு உதாரணம் காயத்ரி ரகுராமனும், டெய்ஸியும். இப்படி ஒரு மோசமான அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு குஷ்பு போன்ற பெண்கள் சத்தமாகப் பேசி அரசியல் ஆதாயம் தேடும் செயல் அருவெறுப்பாக உள்ளது.

பயம் ஏற்படுத்தவே’ என பகிரங்க அறிவிப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தின் போது பில்கிஸ் பானு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரின் உடல்கள் எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் எரிக்கப்பட்டன. பில்கிஸ் பானு அப்போது ஐந்து மாத கர்ப்பிணி, மேலும் கொல்லப் பட்டவர்களில் பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகளும் அடங்குவார். இந்தக் கொடு மைக்கு எதிராக நாடே கொந்தளித்தது. ஆனால் இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியதோடு முஸ்லீம்களுக்கு பயம் ஏற் படுத்தவே இந்த சம்பவம் நடத்தப்பட்டது என பகிங்கரமாகவே செய்தி வெளியிட்டு போராட்டம் நடத்தினர்.

கொஞ்சம் கூட மனச்சாட்சியற்று கொலைபாதகச் செயல்களை அரங் கேற்றிய 11 குற்றவாளிகளை தண்டனை காலத்திற்கு முன்பே குஜராத் பாஜக அரசு விடுதலை செய்தது. இந்த விடு தலையை இந்து அமைப்புகளும், பாஜக வும் கொண்டாடின. வஞ்சிக்கப்பட்ட பில்கிஸ் பானுவும் மனச்சாட்சியுள்ள மனி தர்களும் கையறு நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

கொடூரத்தின் உச்சம்
காஷ்மீரத்தில் உள்ள கத்துவா கிராமத் தில் ஆடு, குதிரை, மாடுகள் மேய்க்கும் குஜ்ஜர் எனப்படும் முஸ்லிம் நாடோடி மேய்ப்பர் சமூகத்தைச் சேர்ந்தவர் யூசூப் புஜ்வாலா, நசீமா பிபி இவர்களின் மகள் எட்டு வயது சிறுமி ஆசீபா. காணாமல் போய் 5 நாட்களுக்குப் பிறகு சிறுமியின் உடல் கண்டிபிடிக்கப்பட்டது. கால், கைகள் உடைந்து, மண்டையோடு சிதைக் கப்பட்டு, உடல் முழுக்க ரத்தமாக, கீறல்க ளுடன், உடல் நீல நிறத்தில் மாறி பிணமாகக்கிடந்தாள். ஏழுபேரை குற்ற வாளிகள் என தனிப்படையின் விசாரணைக் குழு உறுதி செய்தது.  குற்றவாளிகளில் 2 பேர் 18 வயது நிரம் பாதவர்கள், 4 பேர் போலீஸ்காரர்கள், அதில் ஒருவர் ஆசீபா வழக்கை விசாரித்து வரும் தீபக் என்ற காவலர். இவர்கள் அனை வரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இது பற்றி பேசிய பாஜகவைச் சேர்ந்த ராஜீவ் ஜாஸ்ரோட்டியா, இது அந்த சிறுமியின் குடும்ப விசயம் என்றார். குற்றவாளிகளைக் கைது செய்வதை எதிர்த்து இந்து அமைப்பு நடத்திய பேரணியில் இரண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று குற்றவாளிகள் கைதுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பிரதமர் மோடி இதுபற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மௌனம் காத்ததை உலகமே வேதனையுடன் பார்த்தது. ஆசீபாவின் உடலை எங்கள் பகுதியில் எரிக்கக்கூடாது என்று பாஜகவின் சார்பு அமைப்புகள் மிரட்டினர். இதனால் 7 கி.மீ தூரம் கொண்டு சென்று அந்த சிறுமி யின் உடலை எரியூட்டினர். ஆசீபா ஒரு மனித உயிராகவே மதிக்கப்படவில்லை. இச்சம்பவம் இந்து மத அடிப்படைவாதி களுக்கு எந்த உறுத்தல்களையும் ஏற்படுத்தவில்லை.

மல்யுத்த மகளிரும் தப்பவில்லை
இந்திய மல்யுத்த வீரர்கள், 2023 ஜனவரி 18-ஆம் தேதி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியு மான பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை அவரது வீட்டில் சந்தித்து முறையிட்டனர். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவிற்கு கடிதம் எழுதினர். மே-29 அன்று மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன. மே-30 தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்து கண்ணீர் மல்க தங்கள் எதிர்ப்புக் குரலை ஊடகங்களில் தெரிவித்தனர். 

பாலியல் குற்றவாளியை பாதுகாக்க மிரட்டும் பாஜக
சர்வதேச மல்யுத்த சம்மேளனம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்டவை இப்பிரச்சனையை விசாரிக்கும் விதத்தை கேள்வி எழுப்பி கண்டனம் தெரி வித்தது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பாலியல் குற்றம் செய்தவர் பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் என்பதால் அவரைப் பாதுகாக்க வரிந்து கட்டிக்கொண்டு நிற்கி றார்கள். ஒருபடி மேலே போய் போராட் டத்தை வாபஸ் வாங்கச் சொல்லி அமித்ஷா  மிரட்டுகிறார். போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டதாக ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற செய்தியை பரப்பி போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் வேலையைச் செய்தனர். இந்தியாவின் பெருமைமிகு மகள்கள் கண்கலங்கி 6 மாதங்களாக தெருவில் நிறுத்தப் பட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா சட்டக் கல்லூரி மாணவி கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் தலை யிட்டு நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தியது. அதன் பிறகு  சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த புலனாய்வுக் குழு அவரை கைது செய்தது. நீதிமன்ற நடவடிக்கையால் இது சாத்தியமாக்கப்பட்டது.  இப்படியான வன்முறைகள் வரம் பின்றி நடைபெறுவது அதிகரித்துள்ளது. மதிக்கப்படவேண்டிய பெண்ணினம் அவமதிக்கப்படுகிறது. மனித சமூகத் தில் முதன்முதலில் ஒடுக்கப்பட்ட பகுதியி னராக இருந்தவர்கள் பெண்கள்தான் என்பது முந்தைய வரலாறு. காலச்சக்க ரத்தை பின்னோக்கிச் செலுத்தும் பிற் போக்கு சக்திகளை சாக் ஷி மாலிக், சங்கீதா போகத் போன்ற பெண்சக்திகள் முறிய டிக்கும் என்பது எதிர்கால வரலாறாகும்.