Monday 15 August 2016

அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்படுமா?

ஜி. ராமகிருஷ்ணன்                                       சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர்


                              தருமபுரி மாவட்டம் பாப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் அரசு ஆரம்பப்பள்ளி கடந்த 30 ஆண்டுகாலமாக செயல்பட்டு  வந்தது. இப்பள்ளி யில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரைசுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்தஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை ஒரு மாணவர்கூட இந்தப் பள்ளியில் படிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பில்மட்டும் நான்கு மாணவர்கள் படித்தனர். அந்த நான்கு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுஇவ்வாண்டு ஆறாம் வகுப்பில் சேர அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று விட்டனர்.தற்போது இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு மாணவர் கூட சேரவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டும் வேலை நாட்களில் பள்ளிக்குவந்து செல்கிறார். இதனால் 30 ஆண்டு களாக செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி தற்போது மூடப்படும் அபாயத்தில் உள்ளது.இது ஒரே ஆண்டில் உருவான பிரச்சனை அல்ல. பல ஆண்டுகளின் தொடர்ச்சிதான் இந்த நிலை உருவாகக் காரணம். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிற போது மாணவர்களைத் தக்க வைக்கவோஇ புதிதாக மாணவர்களை சேர்க்கவோ பள்ளி ஆசிரியர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? இந்த விஷயத்தில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஏன் தலையிடவில்லை? மாநில அரசின் கல்வித் துறை என்ன செய்கிறது?அரசுப் பள்ளிகளில் மாணவர் எண் ணிக்கை குறைவதும்இ தனியார் பள்ளிகளில் அதிகரிப்பதும் கடந்த பல ஆண்டு காலமாக நீடித்து வரும் அவலம். 2001-ஆம் ஆண்டு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 11இ68இ439-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2014-இல் 36இ17இ473-ஆக அதிகரித்தது.

ஆனால்இ மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது.2008-09-இல் இருந்து 2012-13 வரையிலான நான்கு ஆண்டுகளில் மாண வர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்ட அ.தி.மு.க. அரசு மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைப்பதற்கு இலவசமாக புத்தகப்பைகள்இ கணித உபகரணப்பெட்டிகள்இ கிரையான்ஸ்இ வண்ணப் பென்சில்கள்இ பாடப்புத்தகங்கள்இ நோட்டுப் புத்தகங்கள் போன்ற இலவசங்களை வழங்க திட்டமிட்டது. இதற்குப் பிறகும் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.உதாரணமாகஇ 2013-14இ 2014-15ஆம் ஆண்டுகளில் அரசின் மானியக்கோரிக்கை அறிக்கையின் படியே அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 55இ774 குறைந்துள்ளது.2007-08இல் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் 2இ44இ864-ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2014-15இல் 1இ54இ080-ஆக குறைந்துவிட்டது.சென்னையில் கடந்த 13 ஆண்டு களில் 54 மாநகராட்சிப்பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. இக்காலத்தில் மாநகராட்சிப்பள்ளி களில் 1இ20இ000-ஆக இருந்த மாணவர் களின் எண்ணிக்கை 85இ000-ஆக குறைந்து விட்டது.தருமபுரி மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டு 98இ526-ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2015-இல் 84இ243-ஆக குறைந்து விட்டது.அ.தி.மு.க.இ தி.மு.க. அரசுகள் பள்ளிக் கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவித்த காரணத்தினால்இ மாநிலத்தில் பல மாவட் டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதோடு பல பள்ளிகள் மாணவர்கள் இல்லாததால் (பாப்பம்பட்டி பள்ளியைப் போல்) மூடப் பட்டு விட்டன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்படுவதால் பாதிப்பு யாருக்கு? சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் ஒன்றியம்இ விராச்சிலை என்ற கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும்பள்ளிக்கு சென்றிருந்தேன்.இப்பள்ளி 1899-ஆம் ஆண்டு உரு வானது. 120 ஆண்டுகளாக இயங்கி வரும்இப்பள்ளியில் ஒரு கட்டத்தில் 800 மாண வர்கள் படித்தனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இந்த நடுநிலைப் பள்ளியில் தற்போது 224 மாணவர்கள் உள்ளனர்.கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் களும்இ தாளாளரும் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி கடுமையான முயற்சி மேற்கொண்டு மாணவர்களின் எண்ணிக்கையை தக்க வைத்துள்ளனர்.இப்பள்ளி மாணவர்களின் பொருளாதார பின்னணியை ஆய்வு செய்ததில்இ பெரும் பான்மையான மாணவர்கள் ஏழை குடும்பங் களை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.224 மாணவர்களில் தலித் பிரிவினர் 100 பேர்இ மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி களைச் சார்ந்த மாணவர்கள் 102 பேர்இ பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த மாணவர்கள் 22 பேர். 178 மாணவர்களின் பெற்றோர்கூலித் தொழிலாளர்கள்இ மூன்று மாணவர்களின் பெற்றோர் துப்புரவுத் தொழிலா ளர்கள். 18 மாணவர்களின் பெற்றோர் ஏழைவிவசாயிகள். பூசாரிஇ மண் பாண்டம் செய் பவர்இ ஆசாரிஇ டீக்கடைஇ பெயிண்டிங் வேலை போன்ற இதர பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 25 பேர்.விராச்சிலை அரசு உதவி பெறும் பள்ளி யின் தாளாளர் லாப நோக்கோடு பள்ளியை நடத்தவில்லை. அவர் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் தன் சொந்தப் பணத்தை செலவு செய்வதாக கூறினார். ஆசிரியர் நியமனத்திற்கு அந்தத் தாளாளர் பணம் வாங்குவதில்லை என அங்குள்ள ஆசிரியர்கள் நெகிழ்வோடு கூறினார்கள்.இப்பள்ளிக்கு 9இ 10-ஆம் வகுப்புகள் தொடங்க அனுமதியளித்து இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்துவதோடுஇ ஆங்கில வழி வகுப்புகள் துவங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியம் வல்லம்பக்காடு கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 2013-14இல் 21 மாணவர்கள் மட்டுமே படித் தனர். தனியார் பள்ளிகளை நோக்கிச் சென்றமாணவர்களை அரசுப்பள்ளிக்கு ஈர்க்க ஆசிரியர்கள்இ ஊர் மக்களிடம் ரூ.5.50 லட்சம் வசூல் செய்து இரண்டு வகுப்பறைகளைக் கட்டியதோடு அதில் குளிர்சாதனம்இ மின்விசிறிகளை பொருத்தினார்கள். சுத்திகரிக் கப்பட்ட குடிநீர்இ கணினி வசதிகளையும் ஏற்படுத்தியதோடு கூடுதலாக ஒரு வகுப்பறையும் கட்டினார்கள்.அரசுப் பள்ளிக்கு அருகில் இருந்த அங்கன்வாடி மையத்திற்கு இடவசதி குறைவாக இருந்ததால் அரசுப்பள்ளிக்கு அருகில் ஒரு புதிய கட்டடத்தையும் கட்டினார்கள். அங்கும் குடிநீர்இ கழிப்பறைஇ சிமெண்ட் நடைபாதை ஆகியவற்றை அமைத்ததோடு இரண்டு ஆசிரியர்களையும் நியமனம் செய்தார்கள். அங்கன்வாடி குழந்தைகள் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள்அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கினார்கள்.இதனால் தற்போது அங்கன்வாடியில் எல்.கே.ஜி.இ யு.கே.ஜி. வகுப்புகளில் 37 குழந்தைகளும்இ பள்ளியில் 79 மாணவர் களும் பயில்கின்றனர். அரசுப் பள்ளியைப் பாதுகாக்கஇ ஆசிரியர்களும்இ ஊர் மக்களும் இணைந்து களமிறங்கியதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.மேலும் புதுக்கோட்டை மாவட்டம்இ திருவரங்குளம் ஒன்றியம்இ நெடுவாசல் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியினால் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிந்துள்ளது. ஊர்மக்கள் உதவியோடு மாநிலத்தில் சில அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைத்த தோடு சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்திய பல நல்ல அனுபவங் களும் உண்டு.அரசுப் பள்ளிகளை பாதுகாப்பது என்பது ஏழைக் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாப்பதாகும். அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைக் குழந்தைகள் எங்கே செல்வார்கள்?சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கும்இ சில அரசுப்பள்ளிகள் மூடப்படுவதற்கும் காரணமென்ன?தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் அணுகுமுறையை மாற்றி அரசுப் பள்ளி களைப் பாதுகாக்கக்கூடிய கொள்கையைஇ மாநில அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும். இலவசங்கள் கொடுத்தால் மட்டும்போதாது. குடிநீர்இ கழிப்பிடம்இ பரிசோதனைக்கூடம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு களையும் அளித்திட வேண்டும்.

பல பள்ளிகளில் உதவியாளர்கள் இல்லைஇ காவலர்கள் இல்லைஇ துப்புரவு செய்திட ஆளில்லை. சில பள்ளிகளை இரவு நேரங்களில் சமூக விரோதிகளும் குடிகாரர்களும் பயன்படுத்துகின்றனர்.ஓவியம்இ இசைஇ நடனம்இ விளையாட்டு என மாணவர்களின் திறன் வளர்க்கும் ஏற்பாடு இல்லை. பணியாற்றும் ஆசிரியர் களின் பணிக் கலாச்சாரத்திற்கும் பள்ளி முன்னேற்றத்தில் ஒரு முக்கிய பங்குண்டு. இவற்றையெல்லாம் அரசு ஏற்பாடு செய்திட வேண்டும். தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.இ யு.கே.ஜி. துவங்குவதால் குழந்தைகள் தொடர்ச்சியாக அதே பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் வாய்ப்பு உருவாகிறது. எனவேஇ அரசுப்பள்ளிகளோடு அங்கன்வாடி மையங்களை இணைக்க வேண்டும். அங்கு எல்.கே.ஜி.இ யு.கே.ஜி. முடித்து தொடர்ச்சியாக அரசு பள்ளியில் முதல் வகுப்பில் குழந்தைகள் சேரும் வாய்ப்பை உருவாக்கினால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.பல பாதகமான பரிந்துரைகளை செய் துள்ள டி.ஆர்.சுப்ரமணியம் தலைமையிலான குழு அங்கன்வாடி மையங்களை அரசுப் பள்ளிகளோடு இணைக்க வேண்டுமென்ற சாதகமான அம்சத்தையும் கூறியுள்ளது.கல்வித் தரத்தை உயர்த்தி அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டிய முக்கிய மானப் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

Friday 22 July 2016

 

பெண்களுக்கு எதிரான இணைய ஒடுக்குமுறை!

முகநூலில் பலரும் பார்க்கும்படி தனது படத்தை மார்பிங் செய்து பரப்பியதால் மானம் போய்விட்டதாய் தன் உயிரை மாய்த்துக்கொண்ட வினுப்பிரியாவிற்கு அஞ்சலி செய்து பயன் இல்லை. இச்சமூகம் உளமாற சில விசயங்களை உள்வாங்கவேண்டும். இந்த விஞ்ஞான யுகத்தில் ஒரு பெண்ணை ஆபாசமாகப் படம் எடுப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. அதற்காக முக்காடிட்டு கொண்டே அலையமுடியாது. துணிச்சல் மூலமே இப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும். இம்மாதிரியான ஊடக ஒடுக்குமுறைக்கு பெண் அடிபணியமாட்டாள் என்ற எண்ணம் மேலோங்கினாலே பெண்கள் தைரியமாக இப்பிரச்சனைகளை எதிர்கொள்ள முன்வருவார்கள். இது போன்ற பிரச்சனைகளில் குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்கள், நெருக்கமானவர்கள் தைரியப்படுத்தவேண்டும்;.  அதைவிட்டுவிட்டு உனக்கு பேஸ்புக் தேவையா? இதுக்குத்தான் படிக்க அனுப்பினதா? போட்டோவை எதற்கு அப்லோடு செய்தாய்? என்று அவளை குறுகவைக்கும்போது நாம் தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்ற மனநிலைக்கு பெண் செல்கிறாள்.

     இப்படிப் பலரும் செய்யும் உபதேசம் பெண்களை மிரட்டுவதாகவே உள்ளது. ஏன் ஒரு பெண் தன் விருப்பங்களை; புகைப்படத்துடன் வலைதளங்களில் பதிவிடுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? அப்படி பதிவிட்டால் அய்யோ மானம் போய்விடும், மார்பிங் செய்துவிடுவார்கள் என்று பிதற்றுவது எவ்வகையில் ஏற்கத்தக்கது. கீழ்தரமான பதிவுகளை, மற்றவர்களைக் காயப்படுத்தும் படியான குற்றங்களைச் செய்பவர்களைக் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு மாறாக, பெண்களை கொச்சைப்படுத்துவது சரிதானா?. பேஸ் புக்கில் தவறு இழைப்பவர்களை, அவர்கள் பயன்படுத்தும் கணினியின் ஐபி முகவரி மற்றும் சர்வர் மூலம் எளிதில் இனங்காணலாம். யாருக்கு தெரியப்போகிறது என்று தவறிழைப்பவர்களை தண்டிப்பதில் நமது காவல்துறையின் செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் காரணமாகிறது.

     என்னதான் காவல் நிலையங்கள் பலகோடி நிதி ஒதுக்கி நவீன மாக்கப்படுகிறது என்று அரசு அறிக்கை விட்டாலும், இன்று இணையக்குற்றங்கள், அல்லது விஞ்ஞான ரீதியான குற்றங்களைத் தடுப்பதற்கு உள்@ர் காவல் துறையால் முடியாதநிலை உள்ளது. அதற்கான பயிற்சியோ, வசதிகளோ தற்போதைய காவல் நிலையங்களில் இல்லை. சைபர் கிரைம் என்பது தனியாக உள்ள துறை அதன் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டுமானால் அதிகாரிகளின் பரிந்துரைகள், சில சட்ட நடைமுறைகள் உள்ளன. சைபர் கிரைம் மக்களுக்கு தொடர்பில்லாத தூரத்தில் உள்ளது. காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கும்போது சாதாரண புகாரை விசாரிப்பது போலவே, உள்@ர் காவல் நிலையங்களில் அனுகுவதன் மூலம் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல், மேலும் அவமானப்படுகிறோமோ என்ற எண்ணத்தில் பெண்கள் புகார் தெரிவிக்க வருவதற்கு தயங்குகின்றனர். அதன் வெளிப்பாடுதான் இப்போது தமிழகத்தில் ஊடகங்கள் முதல் பலரும் நாம்தான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று ஆரம்பித்து பெண்கள் முகநூல் பயன்படுத்துவதே தவறு. தேவையில்லை விட்டுவிடுங்கள் இது பெண்களுக்கான இடம் இல்லை. எனற தொனியில் பெண்களை இணைய ஒடுக்குமுறைக்கு இட்டுச்செல்கிறது.

மாணபங்கம் செய்தல் என்ற கற்பிதம்

     ஒரு பெண் தனியாக நடந்து செல்கிறபோது ஒருவன் அவள் கையை பிடித்து இழுத்துவிட்டான், இதனால் “என் மானம் போய்விட்டது” என்று ஒரு பெண் இடிந்து போவது எதானால்? “என்னை ஒருவன் போட்டோ எடுத்து நெட்டில் கிராபிக்ஸ் செய்து நிர்வாணமாகப் போட்டுவிட்டான் எனவே நான் அசிங்கப்படுத்தப்பட்டுவிட்டேன். இனி யார் முகத்திலும் விழிக்கமாட்டேன் என்று தற்கொலை செய்துகொள்கிறாள் இது எதனால்?    என்னிடம் ஒருவன் லவ்லெட்டர் கொடுத்தான். எனக்கு அசிங்கமாகிவிட்டது. என் வீட்டிற்கு தெரிந்தால் படிக்க அனுப்ப மாட்டார்கள் என கவலையில் உறைந்துபோகிறாள் இது எதனால்? அப்பா அல்லது அண்ணன் முன்பு தன் சக தோழனுக்கு கைகொடுத்து பேசியதால், “நீ ஓடுகாளியா ஒரு பயலுக்கு எங்க முன்னாடியே கைகொடுத்துப் பேசுற” என்று பேசும் குடும்பத்தாரின் முன் கசங்கி நிற்கிறாள் இது எதனால்?

     இந்த கேள்விகளுக்கு பதில் எதுவென்றால், கையைபிடித்து இழுத்தவனை ஓங்கி ஒரு அறை கொடுத்துவிட்டு காவல் நிலையம் செல்ல துணிய கற்றுக்கொடுக்காததால் அந்த பெண் இடிந்துபோனாள். லவ்லெட்டர் கொடுத்தவனிடம் தன் விருப்பத்தை அல்லது மறுப்பை வெளிப்படுத்திவிட்டு தானே அதை எதிர்கொள்ளும் சக்தியற்றவளாக பெண்ணை வைத்திருப்பதால் அவள் உறைந்துபோகிறாள்.     சகதோழனுக்கு கைகொடுத்துப்பேசுவது தவறு என்று சொல்லும் ஆணாதிக்க குனம் கொண்டவர்களிடம் பதில் பேசி எதிர்க்க முடியாததால் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் பேசவேண்டும் என்று முடிவுக்கு வருகிறாள்.

     நெட்டில் நிர்வாணமாய் படம் வெளியிட்டால் தன் மானம் போய்விட்டது என்று இறந்துபோனதால் ‘மானம்’; என்ற வார்த்தை வெற்றி பெற்று விடுகிறது. பெண் தோற்றுப்போகிறாள்.  ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்கு பேருகாலத்தில் ஒரு ஆண் மருத்துவர் அவளின் உடலை நிர்வாண நிலையில் பரிசோதிக்கிறார். அப்போது தன் மனைவி அல்லது மகளின் மானம் போய்விட்டதாக யாரும் நினைப்பதில்லை. இடத்திற்கு தகுந்தவாறு பெண்ணை மானம் என்ற வார்த்தை மூலமாக, கௌரவம் என்ற சொல் மூலமாக இச்சமூகம் பலிகொண்டு வருகிறது.

     மானம், அவமானம், களங்கம், கற்பு இவைகள் பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிற வார்த்தை. இவை பெண்களை இயலாதவர்களாக வைத்திருக்க தூண்டுகிறது. மேற்கண்ட செயல்களில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தேவை என்ற தன்னப்பிக்கை பெண்களுக்கு உருவாவதை கலாச்சாரம், பண்பாடு என்ற பதங்கள் தடுக்கிறது. வினுப்பிரியாவின் மரணம், சுவாதியின் கொலை, இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கிற மிரட்டல்கள், பிளாக் மெயில்கள் என்று நிறைய இருக்கலாம். பெண்கள் தைரியமாக இணையத்தில் வளம் வரவேண்டும். விவாதிக்கவேண்டும், மன உழைச்சலின்றி தங்கள் பதிவுகளை சுதந்திரமாக வெயிடும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும். பள்ளி மாறுவேடப்போட்டிகளில், பெண் குழந்தைகளை வேலுநாச்சியாராக, குயிலியாக பார்த்துச் சந்தோசப்படும் பெற்றோர்கள், நிஜத்தில் சுதந்திரமானவர்களாக பெண்களை மதிக்கவேண்டும். வளர்ச்சிக்காக வந்த விஞ்ஞானத்தை குரூரமான மனநிலை கொண்ட சமூக விரோதிகளிடமிருந்து மீட்கவேண்டும். சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது வரும் புகார்களைச் சில மணி நேரங்களில் உரிய நடவடிக்கைக்கு எடுக்க காவல்துறை முன்வரவேண்டும். வினுப்பிரியாவின் மரணம் இணையத்தை விட்டு பெண்களை துண்டிப்பதாக இருக்கக்கூடாது. தைரியத்தை விதைப்பதாக மாற்றவேண்டும். இப்படிப்பட்ட அவலங்களுக்கு எதிராகப் போராட பெண்கள் முன்வரவேண்டும். நிர்வாணம், அவமானம் என்ற வார்த்தைகளை கொண்டு பெண்களை அடக்கும் ஆணாதிக்க அவலத்தை பெண்ணீய சிந்தனையார்கள் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு அமைப்புகளும் எதிர்த்துப் போராடவேண்டும். இதுதான் வினுப்பிரியாக்களுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

எஸ்.கவிவர்மன்
சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர்
புதுக்கோட்டை மாவட்டம்.

Thursday 25 February 2016

இளவரசன் பேசுகிறேன்....

என் அன்பிற்குறியவர்களே...
என் காதலுக்காக கண்ணீர்விட்டவர்களே...
என் தேவதையே திவ்யா...!

நான் எப்படிச் செத்தேன்
என்பதுதான் உங்கள் ஐயம்...
நான் ஏன் செத்தேன் என்று
யோசிப்பீர்களா...!

அம்பிகாவதி அமராவதி...
லைலா மஜ்னு...
சலீம் அனார்கலி ...
இவர்களைப்பேசிய வாய்கள்...
இனி என்னையும் பேசும் என்பதற்காகவா?

இல்லை...
தலைப்புச் செய்தியாகவேண்டும்
என்ற தலையயழுத்து எனக்கில்லை...
அமரகாவியம் ஆகவேண்டும் என்ற
ஆசையும் எனக்கில்லை...

வாழவேண்டும் என ஆசைப்பட்டேன்...
என் ஆசை மனைவி திவ்யாவின்
விரல் பிடித்து நடக்கவேண்டும் என்பதைத் தவிர...
சராசரிக் கணவனாக
சாகும்வரைக்கும்
அவள் கண்ணீர் துடைக்கவேண்டும் என்பதைத் தவிர...
வேறெந்த ஆசையும் இல்லை.

இப்போது
எனக்கும் சேர்த்து என் திவ்யாவின்
இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது...

ஊரே எரியும் என ஒருபோதும் நினைக்கவில்லை...
நெருப்பு எங்களுக்காகவே படைக்கப்பட்டது
போல் பற்றி எரிந்தது...
சட்டம் காப்பாற்றவில்லை...
சமூகம் காப்பாற்றவில்லை...
காதல் அனாதைகளானோம்...
கடைசியில் என் கண்மணி திவ்யா கல்லாக்கப்பட்டாள்.
நான் பிணமாக்கப்பட்டேன்.

மருத்துவர்கள் குழு
என் உடம்பை அறுத்து கூராய்வு செய்தது.
என் ரத்தமும் சதையும்
நான் செத்ததைச் சொல்லும்...

வேறென்ன தெரியப்போகிறது உங்களுக்கு.
தயவு செய்து
சமூகத்தைக் கூராய்வு செய்யுங்கள்...

காதலுக்கான கடைசி மரணம்
நானாக மட்டும் இருக்கட்டும்.

-எஸ். கவிவர்மன் அறந்தாங்கி

Wednesday 24 February 2016

நந்தவன நாட்கள்....


இனி சாத்தியமில்லை
என்றபோதும்…
சத்தியமாய் மறக்கமுடியவில்லை
அந்த அழகிய நாட்களை.

விரல்பிடித்து 
வீதி நடந்ததை…
நான் பட்டினிகிடந்தால்
உனக்கு பசிக்குமே…
எனக்கு காய்ச்சலென்றால்
உன் உடம்பு கொதிக்குமே…
அகராதியில் கூட இல்லாத
அழகிய சொற்களை
உன் கண்கள் பேசுமே...
அந்த வீதிகளும்…
வீடும் இன்னும் இருக்கிறது.
கடக்கும்போதெல்லாம்
மனசு கனத்துப்போகிறது…
இப்போதும்
உன் நினைவுகள் 
என் சுகமான வலிகள்
அந்த நந்தவன நாட்களின்
அழகிய கவிதையே…
உன்னையா இழந்துவிட்டேன்.
-கவிவர்மன்…